வேளச்சேரி அருகே அதிவேக பயணம் காரணமாக இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், பள்ளிக்கரணையை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழதார்.

பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா. இவரது மகன் மோகன்ராஜ். சந்திராவும், மோகன்ராஜும் பிற்பகலில் கோயம்பேடு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில்  வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். வேளச்சேரி ரயில்வே மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியதால் கீழே விழுந்த சந்திரா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ்  லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தோடு, வழக்கும் பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.