இந்தூர்:
த்திய பிரதேச மாநிலம் இந்தூரில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான காவல்துறை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் , அங்கு 1485 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில், அங்க கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி இன்று காலை உயிரிழந்தார்.
இவர் இந்தூரில்உள்ள ஸ்ரீ அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.‘
ஏற்கனவே கடந்த 9ந்தேதி , இந்தூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவர் உயிரிழந்தது இதுவே முதன்முறையாகும்.  இந்த நிலையில் தற்போது காவல்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.