சென்னை:

திருவான்மியூரை அடுத்த நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி யாற்றி வரும் இளைஞர் ஒருவர், அங்குள்ள பள்ளியின் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நீலாங்கரையில உள்ளது சன்பீம் எனப்படும் தனியார் பள்ளி. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அந்தோனி என்பவர். இவர், பள்ளிக்கு சொந்தமான விடுதியையும் கவனித்து அங்கேயே தங்கியிருந்து ஆசிரியர் பணி செய்து  வருகிறார்.

இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர்கள், ஆசிரியரின் பிணம் அங்குள்ள மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அலறியடித்துக்கொண்டு தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

அவர் இதுதொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு புகார் கொடுக்க,காவல்துறையினர் விரைந்து வந்து ஆசிரிரின் சடலை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். விசாரணையில் ஆசிரியர் பெயர் அந்தோனி ஜெனிபர் என்பதும்,  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.