கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக வேறொறு பெண்ணுக்கு தனது கணவரை, மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். திருமணமானத்திலிருந்து பெண்ணின் கணவர் சோகத்திலேயே இருந்துள்ளார். அதற்கான காரணம் அந்த பெண்ணிற்கு முதலில் புரியவில்லை. அந்த பெண்ணும் அது குறித்து எதுவும் தனது கணவனிடம் கேட்டு கொள்ளவில்லை. அலுவலகம் முடிந்து சந்தோசமாக வரும் கணவன் வீட்டிற்கு வந்ததும் ஏன் சோகமாக மாறி விடுகிறார் என்பது, அந்த பெண்ணிற்கு புரியாத புதிராக இருந்துள்ளது.

சமீப நாட்களாக கணவர் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். அதுகுறித்து அறிந்து கொள்ள முயன்ற போது, அப்பெண்ணுக்கு விபரம் புரிந்துள்ளது. திருமணம் ஆன நிலையிலும், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து முதலில் அதிர்ச்சி அடைந்த அப்பெண், பின் தனது கணவரிடம் அந்த பெண்ணுடன் இருக்கும் தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர், அதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே தனது கணவருடன் தொடர்பில் இருக்கும் பெண்ணை சந்தித்த அந்த பெண், தொடர்பை துண்டித்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அந்த பெண், உனக்கு பணம் தருகிறேன் நீ வேண்டுமானால் உன் கணவரை விட்டுக்கொடு எனக் கூறியுள்ளார். முதலில் இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், ஒரு கட்டத்தில் தனக்கு இருக்கும் கடன் மற்றும் கணவரின் பிடிவாதம் ஆகியவற்றை உணர்ந்து, விட்டுக்கொடுக்க சம்மதித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடந்த பேரத்தில் முதலில் 17 லட்சம் என பேசப்பட்டிருக்கிறது. பின்னர் 5 லட்சமாக அது குறைக்கப்பட்டு, பேரம் முடிவுக்கு வந்துள்ளது. பேரம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுள்ளார்.

பணத்திற்காக தனது கணவரை மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.