சென்னையில் வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் விஷம் ஏறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3வது தெருவில் பழனி என்பவர், தனது மனைவி சுமித்ராவுடன் வசித்து வருகிறார். தனது வீட்டை சுமித்ரா சுத்தம் செய்துக்கொண்டு இருந்தபோது, வாசலில் வைக்கப்பட்டிருந்த ஷூவையும் எடுத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக ஷூவுக்குள் இருந்து வெளிவந்த பாம்பு ஒன்று, அவரை கடித்து.

இதனால் வலியில் கத்திய சுமித்ராவின் குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர், சுமித்ராவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சுமித்ராவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, அவரது கணவருக்கும் தகவல் கொடுத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் சுமித்ராவை தொடர்ந்து கண்காணிப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷூவில் இருந்த பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பாம்புகள் தொடர்பான அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.