தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை: என்டிஏ அறிவிப்பு
டில்லி:
தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தேசிய நுழைவுத் தேர்வு ஆணையம் (NTA) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த மாதம் 1-ம் தேதி முதல் ஜேஇஇ மற்றும் யுஜிசி நெட் (UGC NET) தேர்விற்கான விண்ணப் பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்வ தேசிய நுழைவுத் தேர்வு ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
தேசிய நுழைவுத் தேர்வு ஆணையத்தின் இந்த அறிவிப்பின் படி ஜேஇஇ, நெட் தேர்வுகளுக்கு ஆன்லைன்னில் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணினை அளிப்பது கட்டாயம் இல்லை. ஆனால், தேர்வை எழுதுழபவர்கள் தங்களின் அடையாளமாக பாஸ்போர்ட் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண் அல்லது ஏதேனும் ஒரு அரசாங்க அடையாள எண்வழங்க வேண்டும் என்றும் ஆதார் கட்டாயமாக்கப்படாது.
யுஜிசி நெட் தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் மற்றும் துணை ஆராய்ச்சியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். அதுபோ, ஜெஇஇ மெயின் தேர்வு ஆனது இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்), இளங்கலை பொறியியல் (BE) மற்றும் இளங்கலை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (பி.இ.ஆர்) படிப்புகள் (ஐ.ஐ.டி), தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.க்கள்) மற்றும் இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் இணைவதற்காக நடத்தப்பட்டு வருகிறது.
ஜேஇஇ மற்றும் யுஜிசி நெட் ஆகிய இரண்டு தேர்வுகளும் வருடத்திற்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது.