தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருப்பவர் ஹிப் பாப் ஆதி.

பாடல், இசை, ஆல்பம், நடிப்பு என திரைத்துறையில் பிசியாக வலம் வரும் ஆதி சமூக பணிகளிலும் அக்கறை கொண்டவர்.

அந்த வகையில் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக ஹிப் பாப் ஆதி பாடம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பக்கத்தில்

கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள் என பதிவிட்டுள்ளார் .