மும்பை:

ம்ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகியான மீரா சல்யால் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57.

முன்னாள் வங்கி நிர்வாகியான மீரான சன்யால் கேரளமாநிலத்தை சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக் கும் மேலாக வங்கித்துறையில் பணியாற்றி வந்தவர், இறுதியாக ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கியின்  தலைமை நிர்வாகியாக   பணியாற்றி வந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து  அரசியலலில் குதித்தார். அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 லோக்சபா தேர்தலில் தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

சன்யால் கடந்த சில காலங்களாக  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்ததாக கூறப்படுகிறது.

சன்வாலின் மறைவுக்கு மறைவுக்கு ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இரங்கல் தெரிவித்துள்ளனர்.