சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. . ஜூலை 1ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

சிதம்பரம்,  ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றிருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி, ஆவாஹணம் செய்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.தி.ஆபத்சகாய தீட்சிதர் கொடியேற்றிவைத்தார்.

அதைத்தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை பூஜையும் நடைபெறும்

ஜூன் 30-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்

பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும்

ஜூலை 1-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.