டாக்கா:

பங்களாதேஷில் அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். நாடாளுமன்ற சபாநாயகரான அப்துல் ஹமீத் 2013 மார்ச்சில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை பாதித்ததால் அதிபர் பதவியை ஏற்றார்.

சிலுர் ரஹ்மான் காலமானதை தொடர்ந்து அதிபராக அப்துல் ஹமீத் தொடர்ந்தார். அவரது அதிபர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர் 2வது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிபர் மாளிகையில் இன்று அவர் பதவி ஏற்றார். சபாநாயகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் சேக் ஹசீனா, அமைச்சர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.