ராமேஸ்வரம் :

றைந்த குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே. முகமது முத்து மீரா மரைக்காயர் ராமேசுவரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவருக்கு நேற்று 104 வது பிறந்த நாள் ஆகும். இதனை தனது வீட்டில் எளிமையான முறையில் ‘கேக்’ வெட்டி கொண்டாடியுள்ளார்.

கொரோனா பரவல் இருப்பதால், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர், எனினும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர், மரைக்காயருக்கு வாழ்த்து அனுப்பி செய்தி அனுப்பி இருந்தார்கள்.

பிறந்த நாளை யொட்டி ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில், மரைக்காயரின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு அப்துல் கலாம் அண்ணன் மரைக்காயர் பிறந்த நாள் கொண்டாடியபோது “ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்ந்தார் என்பதே முக்கியம்” என தெரிவித்திருந்தார்.

– பா. பாரதி