அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். முன்னதாக ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள்.

ஆனால், அபிஷேக் பச்சனுக்கு கரோனா பாசிடிவ் என்பதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் செய்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில்

“சத்தியம் என்றால் சத்தியம் தான். இன்று மதியம் எனக்கு கரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் அனைவரும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி. நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார் .