அபுதாபி:

அபுதாபியில் மின்னணு பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த இந்தியர் உள்பட 28 பேருக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

அபுதாபியில் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து மின்னணு பரிமாற்றம் மூலம் மோசடியாக தங்களது கணக்குக்கு பணத்தை மாற்றிக் கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. அபுதாபி சிஐடி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு 24 மணி நேரத்தில் மோசடி செய்யப்ப 62.5 கோடி திர்ஹம்களை கைப்பற்றினர்.

இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, கனடாவை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர். அபுதாபி கிரிமினல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு 8 பேருக்கு தலா 15 ஆண்டுகளும், 10 பேருக்கு தலா 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 9 பேருக்கு தலா 7 ஆண்டுகளும், ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை என மொத்தம் 28 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.