சென்னை,

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றார் தமிழக ஆளுந்ர் வித்யாசாகர் ராவ். மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் கடிதம்

நேற்று நடைபெற்ற  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து வரும் 9ந்தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பார் கூறப்பட்டு வந்தது.

அதையொட்டி தற்போதைய தமிழக முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தனது  முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். அதில் தனது  தனிப்பட்ட காரணத்திற்காக முதல்வர் பதவியைவிட்டு  விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

ஒபிஎஸ் ராஜினாமா கடிதம்

இதையடுத்து, அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை அலுவலகம் கூறியுள்ளது. மேலும், சசிகலா முதல்வராக பொறுப்பு ஏற்கும்வரை அவரையே முதல்வராக நீடிக்கவும் கூறப்பட்டுள்ளது.