புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆகையால், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி விமான நிலையத்திற்கு  வருகை புரிந்தார். விமான நிலையத்தில் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் பேசியதாவது: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன். அதில் மாற்றுக் கருத்து இல்லை என்று கூறினார்.