சென்னை:  

முந்தானை முடிச்சு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தவக்களை இன்று காலை காலமானார்.

1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி,நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் தவக்களை. முந்தானை முடிச்சு படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைத்து வந்தன.

சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல்,சின்னத்திரை சீரியல்களில் தவக்களை நடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வடபழனியில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக தவக்களை காலமானார்.அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தவக்களையின் சொந்தபெயர் சிட்டிபாபு ஆகும்.

42 வயதான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 70 க்கும் அதிகமான நடித்துள்ளார்.

.