சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆர்எஸ் ராஜன், சதீஸ் பாபு, ஈஸ்வரிமதி, அசோக் குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், அவதூறு பரப்பி தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.