அபி சரவணன்

மால் திரையரங்குகளில் சோதனை என்ற யெரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய் இருக்கிறது என்று நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

குட்டிப்புலி, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இளம் நடிகர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், டில்லியில் தமிழக விவசாயிகள் போராடிய போதும் ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தவர்.

இவர் தனது முகநூல் பக்கத்தில் மால்களில், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் நடக்கும் “சோதனையான” விசயம் குறித்து எழுதியிருக்கிறார்.

முகநூல் பதிவு

“மால் திரையரங்குகளில் சோதனை என்ற யெரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய் உள்ளது…. மெட்டல் டிடெக்டர் இருக்குல… அப்புறம் என்ன……… கைல வேற தடவி பார்குறாங்க?

சரி பெண்களுக்கு மட்டும தான் மானம் உண்டா .? ஆண்களுக்குைஇல்லையோ?

ஆண்கள் மேம்பாட்டு அமைச்சகமேமோ அல்லது ஆண்கள் சங்கமோ அல்லது ஆணகள் சுயஉதவி குழுக்ளோ தலையிட்டு
!ஆண்களுக்கு பெண்களுக்கு உள்ளதை போல அறைபோன்ற மறைவில் சோதனை செய்யலாமே?

தர்மசங்கடத்தில்

அபிசரவணன்…” என்று பதிவிட்டுள்ளார்.

நியாயமான விசயம்தானே.. மால் நிர்வாகிகள் கவனிப்பார்களா?