பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாடகர் எஸ்பி.பாலசுரமணியம் குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெலுங்கில் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது:
லட்சக் கணக்கானவர்கள் விரும்பும் ஒரு பாடகர் எஸ்பிபி. இந்த தேசத்தின் பெருமை. எனது நண்பரும் சகோதரரு மான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைவதற்கான தெரிகிறது
பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள். சென்னையில், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக வாழ்ந்தோம், நாங்கள் அடிக்கடி சந்திப்போம். நான் அவரை என் சகோதரனாகவும், அவரது சகோதரிகள் என்னை தங்கள் சகோதரராகவும் கருதுகிறோம்.
நான் எஸ்பிபியின் உடல்நிலை பற்றி அவரது சகோதரிகள் மற்றும் அவரது மைத்துனர் மூலம் தெரிந்து கொள்கிறேன். அவர் குணமடையும் நிலையில் இருக்கி றார் என்பதை அறிந்து நிம்மதியடைந் தேன். இந்த தேசத்தின் குரலான எஸ்பிபி, விரைவில் குணமடைய வேண்டும், மீண்டும் தனது குரலால் அனைவரையும் மயக்க வேண்டும் .