கொரோனா வைரஸால் திரையுலகினர் பலர் பாதிக்கப்பட்டனர். நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, இயக்குனர்எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்று தீவிர சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வருகிறார். அவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டும் முழுமையாக உடற்தகுதி பெறுவதற்கான பிசியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர் கின்றன.
விஜய் நடித்த புதிய கீதை படத்தில் அறிமுகமாகி கும்கி, கயல், தொடரி, பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளவர் ப்ளோரண்ட் பெரைரா. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நீண்ட காலம் பணியாற்றினார்.


கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் ப்ளோரன்ட் பெரைரா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் திரையுலகினார் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.