சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை, மற்றும் ரம்மி, பிச்சுவா கத்தி, வீரய்யன் போன்றபடங்களி ஹீரோவாக நடித்தவர் இனிகோ பிரபாகர். அவரை ஆர்,கே,நகர் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு.
இதுபற்றி இனிகோ பிரபாகர் கூறியதாவது:
ஆரம்ப கட்டத்தில் சிறிய வேடங்களில் நடித்தபோதும் சரி ஹீரோவாக நடிக்கும் போதும் சரி நான் என்றும் என் கதாபாத் திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பதில் ஆர்வம், காட்டுவேன் அதனால் அந்தந்த பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி விடுவேன்.

ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித் தேன் என்றாலும் அது அப்படத்தின் ஹீரோவுக்கு சமமான வேடம் ஆகும். இப்படத்தை இயக்கிய சரவணராஜன் என்னிடம் யார்த்தத்தை விரும்பினார், நானும் அதையே செய்தேன்.
இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டி யதாக கூறியது என்னை மேலும் உத்வேகப் படுத்தியது. தற்போது இரண்டு புதிய படங்களில் ஹீரோவாக நடிக்கி றேன். சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு இனிகோ பிரபாகர் கூறினார்.