க்டோபர் மாதம் வரையிலேயே இந்த ஆண்டு பிக்பாஸ் 4 நடக்காதா என்ற சந்தேகக் குரல்கள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன, அதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வந்த கமல். ’நலமா இதோ நான் வந்து விட்டேன்’ என்று உற்சாகக் குரலுடன் புதிய வடிவமைப்பில் புதிய தோற்றத்தில் வந்து பிக்பாஸ் 4 நடப்பதை உறுதிபடுத்தினார்.

சும்மாவே கம்பு சுற்றுவார். இந்த முறை தேர்தல் நெருக்கமாக வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பங்கேற் பாளர்கள் செய்யும் அல்பறையைவிட கமல்ஹாசன் போடும் அதிர் வேட்டுக்கள் தினம் தினம் தலைப்பு செய்தி ஆகும் என்பதில் சந்தேகமில்லை.


இன்று வெளியாகி இருக்கும் வீடியோ வில் டான்ஸ் மூவ்மெண்டுடன் என்ட்ரி தந்திருக்கும் கமல் ’சொன்னபடி கேளு….’ என்ற பாடலுடன் புரோமோவை சுழல விட்டிருக்கிறார். லாக்டவுன், கொரோனா விழிப்புணர்வுகளை குடும்பத்தலைவி, அம்மா, பாட்டி, போலீஸ் என பிக்பாஸ் குரலில் கண்டிப்போடு பேச விட்டிருக்கி றார்.

பிக்பாஸ் புதிய அரங்கிற்குள் அடியெடுத்து வைக்கும் கமல், ’கடந்த 3 ஆண்டுகளாக பரிட்சயமான இந்த குரல், இப்ப உங்களுக்குள்ளேயே ஒலிக்க ஆரம்பிடுச்சி.. தப்புன்னா தட்டிக் கேட்பேன். நல்லதுன்னா தட்டிக்கொடுப் பேன்’ என பஞ்ச் பேசி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.