கடு, சரிலேரு நிகெவரு போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. இவரது தீவிர ரசிகர் சுரேஷ் பாபு. நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ் ணா கட்டம னேனி மற்றும் மகேஷ் பாபுவின் நெல்லூர் மாவட்ட ரசிகர் மன்றத்தின் தலைவராவும் இருந்தவர். சுரேஷ் பாபு மாரடைப்பில் மரணம் அடைந்தார்.


இதையறிந்து சுரேஷ்பாபு மறைவுக்கு மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்தார். தன்னுடையை டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் சுரேஷ் பாபு தன்னுடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “சுரேஷ்பாபுவின் மறைவு பற்றி கேள்விப்பட்டவுடன் மனம் உடைந்துபோனேன். உண்மையிலேயே அவரை நான் மிஸ் செய்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு அன்பும் பலமும் இறை வன் தரட்டும்’ என தெரிவித்திருக்கிறார்.
சுரேஷ் பாபுவின் இறுதி சடங்குகள் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் முன்னிலை யில் நெல்லூரில் உள்ள அவரது இல்லத் தில் நிகழ்த்தப்பட்டன. ரசிகர்கள் பலர் பைக் பேரணி நடத்தி அஞ்சலி செலுத்தினர்.