ந்திரஜித், நோட்டா, நிமிர், கேணி, செம போத ஆகாதே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் எம்.எஸ், பாஸ்கர். இவர் பெயரில் வலை தளத்தில் யாரோ கணக்கு தொடங்கி அவர் பதிவிடுவதுபோல் மெசேஜ் பதிவிடுவ தாக அவருக்கு தகவல் வந்தது. இதை யறிந்து அதிர்ச்சி அடைந்தார். யாராவது என் பெயரில் மெசேஜ் பகிர்ந்தால் நம்பாதீர்கள் எனக் கூறியிருக்கிறார்.


இதுபற்றி எம்.எஸ்.பாஸ்கர் கூறியிருப்ப தாவது:
வணக்கம். ஃபேஸ் புக் (Facebook), டிவிட்டர் (twitter), இன்ஸ்டாகிராம் (instagram) போன்ற எந்த சமூகவலைத் தளங்களிலும் நான் இல்லை. என் பெயரில் வரும் எந்தப் பதிவையும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார்,
எம்.எஸ்.பாஸ்கர் 1991ம் ஆண்டிலிருந்து டிடி சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். நம் குடும்பம், விழுதுகள், மாயாவி மாரிச்சன், கை அளவு மனசு, சின்ன பாப்பா பெரியா பாப்பா போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார்.