சென்னை:

டிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவியான கிரகலட்சுமி வீட்டில் 170 சவரன் நகை திருடு போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ச

சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதன் மேல்தளத்தில், நடிகர் பிரசாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமியின் வீடு உள்ளது. ஆனால், அவர் அங்கு தங்காமல், அடையாறில் உள்ள விட்டில் தங்கி வருகிறார். வாரத்திற்கு இரு முறை மட்டுமே இந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு செல்வார்.

இந்நிலையில், நாகராஜ்  வீட்டை பூட்டிவிட்டு தூக்க சென்ற நிலையில் இன்று காலை எழுந்தபோது,  வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, கிரகலட்சுமிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் விரைந்து வந்து பார்த்ததில் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக  மாம்பலம் போலீசில்  புகார் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாயுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில்,  கிரகலட்சுமியின் அறையில் உள்ள பீரோவிலிருந்த சுமார் 20 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் மற்றும், அவரது தங்கையின் அறையில் இருந்து 150 சவரன் நகை கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.