அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜசேகர், அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக ராஜசேகர் தனது ட்விட்டர் பதிவில் :
“ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு என அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மைதான். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறோம். இரண்டு குழந்தைகளும் பூரண குணமடைந்துவிட்டனர். நானும் ஜீவிதாவும் நன்றாகத் தேறியுள்ளோம். விரைவில் வீடு திரும்புவோம். நன்றி” என பதிவிட்டுள்ளார் .