றைந்த  எழுத்தாளர் ஞாநி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சங்கரன் என்ற ஞாநி உடல்நலமில்லாமல் காலமானார். 64 வயதான ஞாநி சிறந்த எழுத்தாளர், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நாடக கலைஞர், திரைப்பட இயக்குனர் பல அவதாரங்களை மேற்கொண்டவர்.

அவரது உடல்  சென்னை சென்னை கே.கே.நகரில் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஞாநியின் வீட்டிற்கு சென்ற ரஜினி அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து  அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ரஜினி கூறும்போது, ஞாநி எனக்கு நல்ல நண்பர் என்றார்.

சிறந்த எழுத்தாளரும்,  மக்களுக்காக பேசக் கூடியவரும், எழுதக் கூடியவருமான ஞாநியின் மறைவு தனக்கு  மிகவும் வருத்தமளிக்கிறது. தனக்கு சரியென்று பட்டதை பயமின்றி பேசவும், எழுதவும் கூடியவர் ஞாநி. அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.