கோலாலம்பூர்:

லேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று மாலை சந்தித்தார்.

நடிகர் சங்கத்தின் கட்டட நிதி திரட்ட மலேசிய தலைநகரக் கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் நட்சத்திரக் கலை விழா நாளையும் நாளை மறுநாளும் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான நடிகர் நடிகைகள் கோலாலம்பூர் சென்றுள்ளனர். ரஜினிகாந்தும் நேற்று இரவு மலேசியா சென்றனர்.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். சமீபத்தில் நஜீப் ரசாக் இந்தியா வந்திருந்தபோது, சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டுக்குச் சென்று சந்தித்தார்.  ரஜினியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டார்  ரசாக்.

இப்போது ரஜினிகாந்த் கோலாலம்பூர் வந்திருப்பதை அறிந்து, அவரை தனது மாளிகைக்கு அழைத்தார் நஜீப் ரசாக். இன்று மாலை அவரது மாளிகைக்குச் சென்ற ரஜினிக்கு ரசாக் விருந்தளித்தார்.