ட்டோடி, அரியானா

னது மூதாதையர் இல்லமான பட்டோடி அரண்மனைக்குச் செல்லும் வழியை நடிகர் சைஃப் அலி கான் மறந்து போய் சாலையில் விசாரித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான மன்சூர் அலி கான் பட்டோடி அரச வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.    அரியானா மாநிலத்தில் உள்ள பட்டோடி நகரத்தில் அவருக்கு சொந்தமான அரண்மனை அமைந்துள்ளது.   அவரது மனைவி ஷர்மிளா தாகூர் ஒரு புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகை ஆவார்.   அவர்களின் மகனான சைஃப் அலி கான் ஒரு புகழ்பெற்ற இந்தித் திரைப்பட கதாநாயகன் ஆவார்.    இவர்  ஏற்கனவே நடிகை அம்ரிதா சிங் கை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.

அதன் பிறகு பிரபல இந்தித் திரைப்பட நடிகை கரீனா கபூரை 2012 ஆம் ஆண்டு மணம் புரிந்தார்.  இவர்களுக்கு தைமூர் என்னும் ஒரு மகன் உள்ளார்.   இன்று தனது 39 ஆம் பிறந்த நாள் கொண்டாடும் கரீனா கபூர் மற்றும் மகன் தைமூருடன் சைஃப் அலி கான் தனது புராதன இல்லமான பட்டோடி அரண்மனைக்குச் செல்ல அந்நகருக்கு நேற்று வந்துள்ளார்.

ஆனால் அவர் தனது இல்லத்துக்குச் செல்லும் வழியை மறந்துள்ளார்.  எனவே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையில் சென்றவர்களிடம் பட்டோடி அரண்மனைக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளார்.   அவர்கள் அவருக்கு வழியை தெரிவித்ததுடன் அவருடன் செல்ஃபி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.