பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத் நேற்று முன்தினம் இரவு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டார். உடனடியாக அவர் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோத னை மேற்கொள்ளப்பபட்டது.

 

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் மூச்சு திணறலுக்காக சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்.
சஞ்சய் தத் ஒன்றிரண்டு நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது, இன்று அவர் மூச்சு திணறல் தொல்லையிலிருந்து குணமானார். இதையடுத்து சஞ்சய் தத் வீடு திரும்பினார்.