செவாலியே சிவாஜி கணேசன் 19 ஆண்டு நினைவு தினம் இன்று, தி. நகரில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிவாஜி மூத்த மகன் ராம்குமார். இளைய மகன் பிரபு மற்றும் குடும்பத்தினர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 
சிவாஜி 19வது நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அஞ்சலி மெசேஜ் வெளியிட்டார். அதில், ’மனித நேயத்தில் திரைஉலக வரலாற்றில் நடிகர் திலகம் படைத்தது சரித்திரம்- சாதனை-சகாப்தம். தங்கள் நினைவை போற்றுகிறோம் வணக்குகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
பராசக்தி படத்தில் நடிக்கத் தொடங்கிய சிவாஜி 288 படங்கள் நடித்திருக்கிறார். அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டு கடந்த ஜூலை 21ம் தேதி 2001 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 74.