டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கை மும்பை போலீஸ் விசாரிக் கிறது. இதற்கிடையில் சுஷாந்த் தந்தை கே கே சிங் பாட்னா போலீசில் ஒரு புகார் அளித்தார். ’சுஷாந்த் தற்கொலைக்கு ரியா சக்ரபோர்த்திதான் காரணம். சுஷாந்த் கணக்கிலிருந்து கோடிக்கணக் கான ரூபாய் மாயமாகி உள்ளது.. இதுகுறித்தெல் லாம் அவரிடம் விசாரிக்க வேண்டும்’ என தெரிவித்தி ருந்தார். மேலும் மும்பை போலீஸார் பாட்னா போலீசாருக்கு ஒத்துழைப்பு தராததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.


இதற்கிடையில் ரியா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதில் ’பாட்னாவில் உள்ள வழக்கை மும்பை போலீசுக்கு மாற்ற வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். சுஷாந்த் வழக்கில் பாதுகாப்பு கேட்டு ரியா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என்றது மத்திய அரசும் வழக்கை சிபிஐக்கு அனுப்ப ஆட்சேபனை இல்லை என்று உறுதி அளித்தது அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐ கையில் எடுக்கும் பட்டசத்தில் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியாதான் காரணம் என்று சுஷாந்த் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதால் ரியாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது