சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்,  காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பிக்பாஸ் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பிஸியாக இருந்தால், அறுவை சிகிச்சைக்கான நேரம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

இதையடுத்து, கடந்த  18 ஆம் தேதி சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தான் நலமாக இருப்பதாக கமல்ஹாசன் டிவிட் போட்டிருந்தார்.  தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல், இன்று  இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.