https://www.instagram.com/p/B-UzPfupiKB/

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் ( கோவிட் -19) படுவேகமாக பரவி உள்ள நிலையில், அப்படி வளர்ந்து வரும் ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டு கடுமையான தனிமைப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இந்நிலையில் Fan, Kaanchli Life in a Slough உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஷிக்கா மல்கோத்ரா கொரோனா பரவி வரும் நிலையில், சேவை மனப்பான்மையுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்பு செவிலியர் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார் ஷிக்கா மல்கோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது .