உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மத்திய அரசு இன்றுடன் அந்த 21 நாட்கள் முடிவடைவதால் மேலும் இரு வாரங்கள் நீடித்துள்ளனர் .

மேலும் கொரோனாவால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் மட்டும் தனது மகன் சஞ்சய் குறித்து கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது .

விஜய் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்நாட்டில் ஜுன் 1-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.