சென்னை:

நாங்கள் கேட்பது நீரப்பா; நீங்கள் தருவதோ சூரப்பா! அண்ணன் தம்பிகள் நாமப்பா; நம்மை பிரிப்பது நீராப்பா? என்று நகைச்சவை  நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாயிகள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் காவிரி பிரச்சினை குறித்து டுவிட் செய்துள்ளார்.

அதில், நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா. என்று பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே 4 மணி நேரம் அறவழி போராட்டம் நடத்துவது குறிப்பிடத்தக்கது.