டிகை பாவனாவிடம் அவரது கார் ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் பாலியல் சீண்டல் செய்தது, நடிகை வரலட்சுமியிடம்  டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் பேசியது என்று திரையுலகம் பரபரத்துக்கிடக்கிறது.

இந்த நிலைியல், திரையுலகில் நடக்கும் “அட்ஜெஸ்மெண்டுகள்” பற்றி அதிரடியாக பேசியிருக்கிறார் நடிகை ரெஜினா.

கண்ட நாள் முதல் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சென்னையை சேர்ந்த ரெஜினா கசான்ட்ரா. தமிழில் பெரிய அளவுக்கு வர முடியாமல் போனாலும், டோலிவுட்டில் முன்னணி நடிகைகயாக வலம் வருகிறார்.

விரைவில் வெளியாக உள்ள செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் நடித்துள்ளார்.

இவர், “நான் நடிக்க வந்த புதிதில், சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்று என்னிடம் சிலர் கூறினார்கள். அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அதிர்ச்சி அடைந்தேன்” என்றவர், “அப்போதே நான், மோசமான நபர்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டேன்” என்றும் ரெஜினா தெரிவித்திருக்கிறார்.

மேலும், “பிரபல நடிகையாக இருப்பதாலேயே “எல்லாவற்றையும்” நாம் தடுத்துவிட முடியாது.  யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை விட பெரிய ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்” என்றும் விரக்தியோடு தெரிவித்துள்ளார்.

ரெஜினாவின் ஓப்பன் டாக், யதார்த்த நிலையை வெளிப்படுத்துவதோடு, அதிர்ச்சி அலையையும் கிளப்பியிருக்கிறது..