நடிகை பானுபிரியா 14வயது சிறுமியை வேலைக்காக வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சிறுமியின் தாய் பானுபிரியா மீது புகார் அளித்துள்ளார்.

bhanupriya

1980 மற்றும் 90 களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் பாக்கியராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் பானுபிரியா. தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த பானுபிரியா தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

தற்போது அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் பானுபிரியா சென்னையில் வசித்து வருகிறார். சினிமாவில் கிடைக்கும் ஒருசில வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு நடித்தும் வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் 14வயது சிறுமியை வேலைக்காக வைத்துள்ளதாகவும், அந்த சிறுமியை கொடுமை படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

பாதிகப்பட்ட சிறுமியின் தாய் ஆந்திர பிரதேசம் கோதாவரியில் உள்ள சமால்கோட் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பானுபிரியா மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “ எனது 14வயது மகளை நடிகை பானுபிரியா சென்னையில் உள்ள தன் வீட்டில் குழந்தை தொழிலாளியாக வைத்துள்ளார். எனது மகளுக்கு சம்பளம் கூட கொடுப்பதில்லை. அதுமட்டுமின்றி குழந்தையை அடித்து கொடுமைப்படுத்தி வருகிறார் “ என அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது குழந்தையை பார்க்க சென்ற போது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டி விட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 14வயது சிறுமியை வீட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சிறுமியின் தாய் புகார் அளித்ததை தொடர்ந்து பானுபிரியா மீது வழங்கு பதிவு செய்யப்பட்டது. நடிகை பானுபிரியா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.