திருவனந்தபுரம்,

பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில நாட்களுக்கு முன்னர் சிலரால் கடத்தப்பட்டு பாலியல்  தொல்லைக்கு ஆளானதாக பரபரப்பாக செய்திகள் வெளியானது.

பாவனாவுக்கு ஆதரவாக மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகம் மற்றும்  பெண்கள் அமைப்பினரும் கொதித்தெழுந்தனர். எல்லா வற்றுக்கும் மேலாக மத்திய அமைச்சர் மேனகா காந்தியோ, கேரள அரசை கலைக்க வேண்டும் என்று கூறி நாட்டையே அதிர வைத்தார்.

இந்நிலையில் நடிகை பாவனா கடத்தப்பட்டு,  சுமார்  2½  மணி நேரம் ஓடும் காரிலேயே அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் முதல் தகவல் அறிக்கையை போலீசார் தயார் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கடந்த 17ந்தேதி திருச்சூர் அருகே பட்டுரைக்கல் என்ற இடத்தில் நடைபெற்ற  படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு திரும்பி கொச்சியில் உள்ள பனம்பிள்ளை நகருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது கார்மீது  நெடுபாச்சேரி விமான நிலையம் அருகே கேட்டரிங் வேன் ஒன்று வந்து மோதியது.

என்ற பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அங்கிருந்து கொச்சி,  பனம்பிள்ளி நகருக்கு காரில் புறப்பட்டார். இரவு 8.30 மணிக்கு நெடுபாச்சேரி விமான  நிலையம் அருகே சென்றபோது, கேட்டரிங் வேன் ஒன்று பாவனா சென்ற கார் மீது மோதியது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான டிரைவர் மார்ட்டின் காரை நிறுத்தினார். அப்போது, மோதிய வேனில் இருந்து இறங்கிய 2 பேர்  பாவனா இருந்த காரினுள் ஏறினர். அவரது வாயை மூடி சத்தம் போடக்கூடாது என எச்சரித்துடன் டிரைவரை காரை ஓட்டும்படி கூறினர்.

கார் கொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, களம்பச்சேரி என்ற இடம் அருகே ஒருவர் இறங்கிவிட்டார். அவருக்கு பதிலாக மற்றொருவர் காருக்குள் ஏறிக்கொண்டார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பாவனாவுக்கு காருக்குள்ளேயே  பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். கார் பாலாரிவட்டம் என்ற இடம் அருகே கென்றபோது காருக்கும் மேலும் 2 பேர் ஏறினர். அதைத்தொடர்ந்து கார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது. அங்கு சுனில்ரகுமார் என்பவர் முகத்தை கைக்குட்டையால் மூடியிருந்தார். அவர்  காரின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரை ஓட்டத் தொடங்கினார்.

தொடர்ந்து கார் காக்கநாடு சென்றது. அங்கும் பாவனாவுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்தது. அப்போது, சுனில் குமார், பாவனாவிடம், அவர் நடிக்கும் சில படங்களுக்கு ஒழுங்கான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். அவர் பேசும்போது அவர் முகத்தை மூடியிருந்த கைக்குட்டை அவிழ்ந்து விழுந்தது. அதன் காரணமாகத்தான் தன்னை எச்சரித்தது சுனில்குமார் என்பதை நடிகை பாவனா அறிய முடிந்தது.

தொடர்ந்து அந்த கும்பல் கொச்சி அருகே பாவனாவை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

திருச்சூரில் இருந்து கொச்சி வரை ஏறக்குறைய  2½ மணி காருக்குள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது.

அதைத்தொடர்ந்து பாவனா, டைரக்டர் லால் வீட்டிற்கு சென்றார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தின்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு பாவனா புகார் கொடுத்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, தனக்கு நடைபெற்ற கொடுமை குறித்து பெண் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

என்னுடைய காரில் அத்துமீறி ஏறியவர் என்னை மிரட்டினார் என்றும்… முக்கியமான நபர் ஒருவரின் உத்தர வின்பேரிலேயே அவர் காரில் ஏறியதாக கூறினார் என்றார். மேலும், அவர் கூறுவதை கேட்டு நடக்க வேண்டும். இல்லையேல் கொச்சியில் உள்ள ஒரு பிளாட்டுக்கு  கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

இவ்வாறு கூறி உள்ளார்.

ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் ஒருவர் தூண்டிவிட்டே இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகை பாவனாவும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு முக்கிய நபர் இருப்பதாக கூறியிருப்பது அந்த தகவலை உறுதிபடுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த நடிகர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பாவனா, கடத்தப்பட்ட காரை தனிப்படை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.  காருக்குள் கிடந்த பொருட்கள் உள்பட பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.