சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியது. இந்தியா வில் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் , மற்றும் விஷால், கருணாஸ், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குண மடைந்தார்கள்.
தற்போது நடிகை ஜெனிலியா கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருக்கிறார். அதுபற்றி தற்போது அவர் தெரிவித்திருக் கிறார்.


’மூன்று வாரங்களுக்கு முன் எனக்கு கொரோனா தொற்று உறுதியா னது. சிகிச்சை எடுத்துக்கொண் டேன். கடந்த 21 நாட்களாக அறிகுறி எதுவும் இல்லை. பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என தெரிந்தது. இது கடவுளின் ஆசிர் வாதம். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையா னதாக இருந்தது’ என்றார்.
ஜெனிலியா தமிழில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சச்சின், சந்தோஷ் சுப்ரம ணியம் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் இந்தி நடிகரும் தனது காதலனு மான ரித்தேஷ் முக்கை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார் ஜெனிலியா.