கீர்த்தி சுரேஷ் தமிழில் கிடுகிடுவென வளர்ந்து வந்தார். யார் கண்ணுபட்டதோ இந்திக்கு நடிக்கப்போகிறேன் என்ற ஆசையில் தமிழ் படங்களில் நடிக்காமல் ஒரு வருடம் இந்தி படத்துக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். அதுவும் கடைசியில் கை நழுவிப்போனது.
தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவரது மகளாக நடிக்கிறார். அவர் நடித்த பெண்குயின் படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.


சில தினங்களுக்கு முன் படப்பிடிப்புகள் தொடங்கியது. ஐதராபாத்தில் பட்டப் பிடிப்பில் பங்கேற்க கீர்த்தி சுரேஷ் புறப் பட்டு சென்றார். மாஸ்க், கிளவுஸ் அணிந்து ஐதராபாத் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய படங்கள் வைரல் ஆகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் திரில்லர் கதை ஒன்றைக் கேட்டு மிகவும் ஆர்வம் அடைந்து அந்த படத்தை அவரே தயாரித்து நடிக்க உள்ள தாக தகவல் பரவியது. ஆனால் அதை மறுத்த கீர்த்தி சுரேஷ், ’இது முழுக்க முழுக்க வதந்தி, தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளேன்’ என பதில் அளித்திருக்கிறார்.