உலகம் முழுவதும் கொரோனா நோய் தோற்றால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது .இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான மயூரி கத்தாரி தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துள்ளார்.

தனது திருமண விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில் ஆம் எனக்கு திருமணம் முடிந்தது.(12.06.2020) பத்து வருட நட்பு இன்று திருமணத்தில் முடிந்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அவரது புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.