ஐயப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம் அடைந்தார். அவரப் பற்றி கூறிய நடிகை மியா ஜார்ஜ், ’உங்கள் குரல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; என தெரிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் மியா எழுதி உள்ளதாவது:


டைரக்டர் சச்சி வேறு உலகத்தைவிட்டு வேற் உலகத்துக்கு சென்றுவிட்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலிருந்து எனது கடைசி திரைப்படம் வரை அவரது ஆசீர்வாதங்கள் என்னிடம் இருந்தன. செட்டாயீஸ், அனார்கலி, ஷெர்லாக் டோம்ஸ் கடைசியாக வெளியான டிரைவிங் லைசென்ஸ். அவற்றில் ஒவ்வொன்றும் எனக்கு ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தியது.
சச்சீ சேட்டன் எப்போதும் என்னை தனது இளைய தங்கையாகவே கருதினார். டிரைவிங் லைசென்ஸ் படத்தில் நாங்கள் சந்தித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் தனது தொலைபேசியில் அய்யப்பனும் கோஷியம் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியைக் காட்டினார். சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசினார். ஆனால் அதுதான் நான் கேட்கும் அவரது கடைசி குரல் என்று எனக்கு தெரியாது. அவரின் குரல் என் காதில் இன்னும் கேட்டுகொண்டே இருக் கிறது. நம்மில் பெரும்பாலோருக்கு அவர் ஒரு சினிமாக்காரன் அல்ல அதை விட அதிகம். நாங்கள் உன்னை நேசிக்கிறோம். உங்களை மிஸ் செய்கிறோம்.
இவ்வாறு மியா ஜார்ஜ் எழுதி உள்ளார்.
மியா ஜார்ஜ் தமிழில் இன்று நேற்று நாளை, அமரக்காவியம். வெற்றிவேல், ரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.