கொரோனா தொற்று பிரபலங்கள் மீது பரவி வருவதால் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நடிகர், நடிகைகளும் பயத்தில் ஆழந்துள்ளனர். மலையளத்தில் ‘கிங் லய்யர்’ படத்தில் நடித்ததுடன் விரைவில் ஒடிடி தளத்தில் வெளிவவிருக்கும் ’டேன்ஞ்சரஸ்’ இந்தி படத்தில் நடித்திருக்கிறார் நடாஷா சூரி.
இவர் அவசர வேலை காரணமாக மும்பையிலி ருந்து புனே என்று திரும்பினார். தெம்பாக சென்ற வர் கொரோனா தொற்றோடு திரும்பினார்.

 

இதுபற்றி அவர் கூறும்போது,’சில நாட்களுக்கு முன் அவசர வேலையாக புனே சென்று திரும்பினேன். அதன் பிறகு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டு அவதிப்பட்டேன். கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்தபோது கொரோனா பாதிப்பு உறுதி யானது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் தங்கைக்கும் கொரோனா பரிசோத னை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.