கொரோனா லாக் டவுன் பெரும்பகுதி விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் கொரோனா பரவல் முற்றிலு மாக விலகவில்லை. அது தனது கைவரிசையை காட்டிக்கொண்டே இருக் கிறது. தொற்று பரவல் ஒருபக்கம், குணமாகி செல்வோர் ஒருபக்கம் என்றாலும் பலி எண்ணிக்கையும் கவனிக் கப்பட வேண்டியதாக உள்ளது.

எஸ்,ஜே.சூர்யா இயக்கிய அன்பே ஆருயிரே படத்தில் நடித்தவர் நிலா என்கிற மீராசோப்ரா. இவர் தனது நண்பருக்கு கொரோனா தொற்றால் ஏற்பட்ட பரிதாபம் பற்றி கூறியிருக்கிறார். அவர் கூறும்போது.’எனது நண்பரின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இருவரும இறந்து விட்டனர். முதலில் அவரது அம்மா அடுத்து அவரது தந்தை இறந்தார்.

 

கொரோனா லாக்டவுன் திறந்திருக்கிறது. ஆனால் எல்லாமே பாதுகாப்பு கிடை யாது. எந்த இடத்துக்கு செல்வதாக இருந்தாலும் அவசியம் இருந்தால் மட்டுமே செல்லுங்கள். கண்டிப்பாக மாஸ்க் அணிந்துசெல்லுங்கள்’ என தெரிவித்திருக்கிறார்.

A