பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து தொலைக்காட்சி நடிகை நிலானி ஃபேஸ்புக் லைவில் பேசியுள்ளார்.

என் விஷயத்தில் ஓவராக பேசினீங்களே, இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் பேச முடியுமா? என்று கோபமாக கேட்டுள்ளார். ஒரு உயிர் போனதால் எனக்கு வேறு மாதிரி பெயர் சொல்லி பட்டம் கட்டினீர்கள். நான் அதை எல்லாம் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் அண்ணா என்று அழைத்தும் உங்களால் எப்படி அப்படி செய்ய முடிந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.