பலரின் துயரங்களால் நிறைந்தது சினிமா என்று சொல்லலாம். நடிகர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் ஒருசில சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேபோல தான் நடிகைகளுக்கும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள். அப்படி படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்திய நடிகைகளைப் பற்றி காண்போம்.

கங்கனா ரனாவத்

 

தற்போது தலைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பொதுவெளியில் பேசக்கூடிய தைரியமிக்க நபர் இவர். திரைப்படங்களில் ஒரு பெரிய பாத்திரத்தைப் பெறுவதற்கு முன்பு அவர் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ஷெர்லின் சோப்ரா

 

காமசூத்ரா நடிகை பணத்திற்காக ஒரு தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. விபச்சார ஊழல்களில் சிக்கியுள்ளார். பிளேபாய் பத்திரிகைக்கு போஸ் கொடுத்த முதல் இந்திய பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு

பயல் ரஸ்தோகி

பிரபல இயக்குனர் திபக்கர் பானர்ஜி தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். இவர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் திபக்கர் பானர்ஜி மறுத்துவிட்டார்.

டிஸ்கா சோப்ரா

இஷானின் தாய் என்று மிக பிரபலமாக அறியப்படுபவர் தாரே ஜமீன் இவர் தனது போராடும் நாட்களில் காஸ்டிங் கோச் என்னும் அனுபவம் தனக்கும் நடந்தாக ஒப்புக்கொண்டார். காஸ்டிங் கோச் என்பது சினிமாவில் நடக்கும் உண்மை என்றும், இது தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் இடையிலான ஒரு ரகசிய ஒப்பந்தம் போன்றது என்றும், இதில் யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மம்தா குல்கர்னி

 

1990 களின் கவர்ச்சி மற்றும் அழகான நடிகை பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி திரைப்படங்களில் ஒரு பெரிய பாத்திரத்தை பெற அவரிடம் சென்றபோது தன்னை படுக்கைக்கு வர கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டிய சம்பவம் திரைத்துறையில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.