மூக்குகுத்திக்கொள்வதுபெண்களுக்கு அழகுதான் அதை காலாகாலத்தில் செய்தால் இன்னும் அழகு. இங்கு ஒரு நடிகை பிறந்தது முதல் அதுபற்றி நினைப்பில்லாமல் 32 வருடம் கழித்து மூக்கு குத்திக்கொண்டிருக்கிறார்.


பூ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பார்வதி. உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், மரியான் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் மலையாள படங் களில் நடித்திருக்கிறார். இவருக்கு கொரோனா ஊரடங்கில் யாருக்கும் வராத ஆசை வந்துவிட்டது. அதுவும் அவரது அம்மாவை பார்த்து இந்த ஆசை வந்தது. அவரது தாயார் மூக்கு குத்திக்கொண்டிருப் பார். அதை பார்த்துத்தான் இந்த ஆசை பார்வதிக்கு வந்திருக்கிறது.
நேராக புறப்பட்டு மூக்கு குத்தும் ஷாப்பிற்கு சென்றார். அங்கு ஒருவர் அவருக்கு ஊசியால் மூக்கு குத்தி திருகாணியுடன் கூடிய மூக்குத்தி மாட்டிவிட்டார். மூக்கு குத்தும்போது எடுத்த வலியில் பார்வதி ஐய்யோ என்று அலறாத குறையாக முகத்தை அஷ்டகோணலாக்கி பிறகு வலியிலிருந்து மீளும் அந்த வீடியோ அழகோ அழகு என்று ரசிகர் மத்தியில் பரவி வருகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது.’நான் மூக்குகுத்திக் கொண்ட இடம் மிகவும் சுகாதாரமான இடம். நீண்ட நாட்களாகவே எனக்கு இந்த ஆசை இருந்து வந்தது. ரொம்ப வலிக்குமே என்று எண்ண வேண் டாம். ஒரு மருவை நீக்கும் வலிதான். அதுவும் இரண்டு நாளில் முழுவதுமாக வலி நீங்கி விடும். ஆனால் இது உங்களுக்கு அடுத்த லெவல் அழகை கொடுக்கும்’ என தெரிவித்திருக்கிறார் பார்வதி.
தனது தாயார் மூக்குத்தியுடன் இருக்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறார் பார்வதி.