சுஷாந்த் சுங் தற்கொலை முதலே பாலிவுட்டில் வெளிமாநில நடிகர், நடிகர்கள் அவமரியாதையாக நடத்தப் படுவது அம்பலமாகி வருகிறது. தமிழில், ’தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ், இவர் இந்தி படங்களிலும் நடிக்கச் சென்று தகுந்த மரியாதை கிடைக்கா ததால் மன அழுத்ததில் இருந்தாக ஏற்கனவே கூறினார். தற்போது பாலிவுட் பற்றி விளாசியிருக்கிறார்.


அவர் கூறியது:
இந்தி படங்களில் தமிழ் அல்லது தென்னிந்திய நடிகைகள் நடிக்கச் சென்றால் அவர்களுக்கு யாரும் மரியாதை தருவதில்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ஏன் வாழ்கையை கெடுத்துக் கொள்கிறாய் இந்தியில் மட்டும் கவனம் செலுத்து நன்கு வாழலாம் என்று என்னிடமே கூறி இருக்கிறார்கள். அதை நம்பி இந்தியில் கவனம் செலுத்தினேன். ஆனால் அப்படியொன்றும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தியிருந் தாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும்.
ரசிகர்கள் தங்களின் விருப்பமான நடிகர் களை தெய்வமாக கருதுகிறார்கள். நடிகைகளுக்கு கோயில் கூட கட்டியிருக் கிறார்கள்.
இவ்வாறு பாயல் கோஷ் கூறினார்.