கார்த்திக் ராஜு இயக்க நடிகை ரைசா வில்சன் பறவையியல் ஆராய்ச்சியாளராக நடிக்கும் படத்துக்கு பெயர் சூட்டப்படாமல், ஊரடங்கு நேரத்திலும் ஷுட்டிங் நடந்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்துக்கு ‘ THE CHASE’’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒரு ’ஸ்டண்ட்’ காட்சியில் நடிகை ரைசாவை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு, படமாக்கியுள்ளார், இயக்குநர் கார்த்திக் ராஜு.

இது புதிய அனுபவம் எப்படி இருந்தது?
ரைசா வில்சன் சொல்கிறார்:
‘’ ஊரடங்கில் ஷுட்டிங் என்று சொன்னதும் , இந்த படத்தில் நடிக்க பயந்தேன். கதை பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான், முழுப்படமும். என் இடுப்பில் ‘பெல்ட்’டையும், காலில் கயிற்றையும் கட்டி மரத்தில் தொங்க விட்டபோது வலி, பிராணான் போனது.ஆனால் ’’ஸ்டண்ட்’ ஆட்கள் சீக்கிரமாகவே இந்த காட்சியை எடுத்து முடித்தனர்.

பறவையியல் ஆராய்ச்சியாளராக நடிக்கும் நான் படத்தில் ஓடிக்கொண்டே இருப்பேன். நிறைய சண்டை காட்சிகள் உள்ள படம் இது. எனது பெரும்பாலான காட்சிகளில் நான் மட்டுமே வருவேன் என்பதால் ’மாஸ்க்’ அணியாமல் நடித்தேன்’’ என்கிறார்,ரைசா.

-பா.பாரதி.